Showing posts with label Personal. Show all posts
Showing posts with label Personal. Show all posts

Saturday, September 10, 2016

அள்ளித்தந்த பூமி அன்னை அல்லவா


அம்மா பிறந்து வளர்ந்து படித்தது எல்லாம் புதுக்கோட்டை அருகிலுள்ள ஒரு கிராமத்தில் தான். 19 வயதில் திருமணம் முடிந்து தூத்துக்குடி உரத் தொழிற்சாலை பணியாளர் குடியிருப்புக்கு வந்தது தான் அவளது முதல் வெளியுலகத் தொடர்பு. அந்தக் குடியிருப்பில் அப்பாவின் நண்பரின் மனைவி தான் ‘வைஷ்ணவி அம்மா’.

அந்தக் குடியிருப்புக்கு அம்மா சென்று இரண்டு ஆண்டுகள் கழித்து திருமணமாகி வந்தவர்  வைஷ்ணவி அம்மா. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். அம்மாவை விட இரண்டு மூன்று வயது இளையவராய் இருந்திருக்க வேண்டும். அவர்களுக்குப் பிறந்த பெண்ணு(வைஷ்ணவி)க்கும் பையனுக்கும் சரியாக என் தங்கை வயதும் தம்பி வயதும் இருக்கும்.

அம்மாவுக்கு நெருங்கிய தோழி என்றால் அது ’வைஷ்ணவி அம்மா’ தான். தினசரி வாழ்க்கைகயைத் தாண்டி ஏதோ ஒன்று இருக்கிறது என்ற எண்ணத்தில் அவர்கள் இணைந்தார்கள்.  ஆனந்த விகடன் தொடர்கதைகள், மகேந்திரன் திரைப் படங்கள் என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.

1981ல் ’நண்டு’ படம் வெளிவந்த போது ’அள்ளித் தந்த வானம் அன்னை அல்லவா’ பாடல் அவர்களை ஆட்கொண்டது. படத்தைப் பற்றியும் பாடலைப் பற்றியும் பேசிப் பேசி மாய்ந்தார்கள். அம்மா சொல்லுவாள் “எல்லாரும் படம் போரடிக்குது, நல்லா இல்லைன்னு சொன்னாங்க. ஆனா எங்க ரெண்டு பேருக்கும் பிடிச்சிருந்தது. இந்தப் பாட்டைப் பத்தி மட்டும் அவ அரை மணி நேரம் பேசினா. நான் கேட்டுகிட்டிருந்தேன்”.





1982ல் என் தந்தை லிபியாவுக்கு வேலைக்குச் சென்றதால் நாங்கள் குடியிருப்பை விட்டு வெளியேறி புதுக்கோட்டைக்கு இடம் பெயர்ந்தோம்.  வைஷ்ணவி அப்பா அபுதாபிக்கு வேலைக்குச் சென்றதால் அவர்களும் சென்னைக்கு இடம் மாறினார்கள். நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாகப் பார்த்துக் கொள்வோம் என்று பேசித் தோழிகள் இருவரும் பிரிந்தார்கள். 1985ல் வேலூரில் நடந்த சாலை விபத்து ஒன்றில் வைஷ்ணவி அம்மா இரண்டு குழந்தைகளுடன் மரணமடைந்தார்.

”அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா” பாடல் அம்மாவின் நினைவில் என்றென்றும் வைஷ்ணவி அம்மாவுடன் சேர்ந்து விட்டது. இந்தப் பாடலை எங்கே கேட்டாலும் அம்மா ஒரு கணம் அப்படியே நின்றுவிடுவாள். கண்ணில் சற்றே நீர் கோர்க்கும்.



Wednesday, January 06, 2016

வேட்டி

இன்று வேட்டி தினமாம். டிவிட்டரில் தெரிந்து கொண்டேன். ராம்ராஜ் நிறுவனத்தின் வியாபார தந்திரங்களில் ஒன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் சகாயம் இ.ஆ.ப (IAS)  கோ ஆப்டெக்ஸ் கூட்டுறவின் தலைவராக இருக்கும் போது கொண்டு வந்த முயற்சியாம் இது.

கிட்டத்தட்ட வாரத்தின் பாதி நாட்களில் வேட்டி கட்டுபவன் நான். சமீப காலமாக நாற்பதை நெருங்கிய பின்  இது அதிகரித்திருக்கிறது.

நான் கீழக்கரை கல்லூரியில் பொறியியல் படிக்கப் போகும் வரை வேட்டி கட்டியதில்லை. சென்னையில் இருந்து கீழக்கரை அதிக தூரம் என்பதால் சிறு விடுமுறைகளுக்குக் கோனாபட்டில் இருக்கும் பெரியப்பா வீட்டிற்குப் போவது வழக்கமாயிற்று. பெரியப்பா பள்ளித் தலைமை ஆசிரியர். ஊரிலேயே இருந்ததனால் அடிக்கடி விசேஷ வீடுகளுக்குப் போய் வர வேண்டி வரும். கூடவே என்னையும் அழைத்துப் போவார், கண்டிப்பாக வேட்டி கட்ட வேண்டும் என்ற கட்டளையுடன். அப்படித் தான் வேட்டி கட்டப் பழகியது.

ஊருணியில் குழந்தைகளுடன்
ஊரிலேயே திருமணமும் நடை பெற்றதால் ரிசப்ஷனுக்கு கோட் சூட் போட வேண்டிய அபாயத்தில் இருந்து தப்பித்தேன். அதற்கும் வேட்டி சட்டை தான்.

மீண்டும் சென்னை வந்த பின் சில வருடங்கள் பொங்கல், தீபாவளி அன்று மட்டும் வேட்டி கட்டி வந்தேன். நாள் ஆக ஆக வேட்டி கட்டுவது மிக சவுகரியமானது என்ற முடிவுக்கு வந்தேன். வேட்டி அணிந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதும் பழகிப் போனது.

சென்னையில் பல உயர் உணவகங்களுக்கு வேட்டியுடன் போயிருக்கிறேன். சற்று வித்தியாசமாகப் பார்ப்பார்கள், அவ்வளவு தான். எங்கும் அனுமதி மறுக்கப் பட்டதில்லை. 5 நட்சத்திர விடுதிகளுக்குப் போனதில்லை.

பொதுவாகப் பருத்தி வேட்டிகள் மட்டுமே வாங்குவது வழக்கம். என் திருமணத்தன்று மட்டும் தான் பட்டு வேட்டி கட்டியிருக்கிறேன். பட்டு வேட்டி கட்டுவது என்பது சென்னையின் கசகசப்பில் வேண்டாத ஒரு செயல். வெளியிடங்களுக்குக் கட்டி செல்ல ராம்ராஜ் வேட்டியும் வீட்டில் கட்டிக் கொள்ள நாகர்கோயில் வடசேரி வேட்டியும் தான் என்னுடைய தேர்வு.

வேட்டி கட்டிக் கொள்வதால் பாரம்பரியம் காக்கிறேன் என்றெல்லாம் கதை விடப் போவதில்லை. எனக்குப் பிடித்திருக்கிறது, வசதியாக இருக்கிறது; வேறென்ன காரணம் வேண்டும்?


Tuesday, March 31, 2015

அழகு நிறைந்த வீடு

எல்லாக் குடும்பங்களிலும் பழங்கதைகள் இருக்கும். லா.ச.ரா. போன்ற தேர்ந்த எழுத்தாளரிடம் அது பாற்கடலாய் பிரவாகிக்கும். பாற்கடலில் ஒரு துளியாவது அடைந்துவிடும் முயற்சி இது.

ஏழு மகன்களுக்குப் பிறகும் ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று காத்திருந்து அந்த ஆசை நிறைவேறாமல் இறந்து போனார் எங்கள் அப்பத்தா. பெயர் அழகம்மை. எங்கள் வீட்டில் அவரது இந்த ஒரு படம் தான் இருக்கிறது.


ஐயாவும் எனக்கு இரண்டு வயதிருக்கும் போதே இறந்து போனதால் அவர்கள் கதை எல்லாமே எனக்கு செவிவழிச் செய்தி தான்.

அப்பாவுக்கு பதினாறு பதினேழு வயதிருக்கும் அப்பத்தா இறந்த போது. கடைசி சித்தப்பாவுக்கு மூன்று வயது தான். அடுத்தது நிச்சயம் பெண் குழந்தை தான் என்று காத்திருந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு வயிற்றில் கட்டி எனத் தெரிந்ததும் தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்குப் போய் சட்டென்று செத்துப் போனதாகச் சொல்வார்கள். எங்கள் குடும்பத்தின் அனைத்து வீடுகளிலும் சாமி அறையில் இந்தப் படம் இருக்கும். வருடா வருடம் படையலும் உண்டு.

பல வருடங்கள் கழித்து அப்பத்தாவின் சிறு வயது தோழி எங்கள் வீட்டுக்கருகே குடிவந்த போது அப்பத்தாவைப் பற்றி ஒரிரு விபரங்கள் சொன்னார். அதில் முக்கியமானது அந்தக் காலத்திலேயே (1938ல்) அப்பத்தாவும் ஐயாவும் விரும்பி கல்யாணம் செய்து கொண்ட விஷயம் தான்.  ஐயா பால் பாட்மிண்டன் (யாருக்காவது இது இன்னும் ஞாபகம் இருக்கிறதா?) விளையாடும் நேரத்தில் அவரைப் பார்த்து அப்பத்தா விரும்பியதாக அந்தத் தோழி பொக்கை வாயால் சிரித்தபடி சொன்னார். வெறும் படமாக இருந்த அப்பத்தா உயிர் பெற்று கண்முன்னே நடமாடத் தொடங்கினார்.


ஐயா வயிற்றில் சிசுவாய் இருக்கும் போதே பர்மாவுக்கு சென்ற அவரது அப்பா அங்கே இறந்து போனார். ஒரே பையன் என்ற காரணத்தால் ஐயாவை அவரது அம்மா வேலைக்கே அனுப்பவில்லை. இப்படி ஒன்றும் செய்யாமல் இருக்கும் பையனுக்கு பெண் கொடுக்க அப்பத்தா வீட்டில் விருப்பமில்லை. அதனால் ஐயாவின் அம்மா பெண்ணிற்கு நகை போட்டு திருமணம் செய்து வைத்து வீட்டிற்கு அழைத்து வந்ததாகக் கேள்வி.

மிகவும் பிடிவாதக் காரர் என்று சொல்லுவார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்த அண்ணன் தன்னைச் சற்று இளக்காரமாகப் பேசியதால் அவர் வாங்கி வந்த எந்தப் பொருளையும் எடுத்துக் கொள்ளாமல் அவரை அழ வைத்திருக்கிறார்.

ஏற்கனவே சொன்னது போல் அப்பத்தாவிற்கு பெண் பிள்ளை வேண்டுமென்று கொள்ளைப் பிரியம். ஆனால் நடக்கவில்லை. அதற்கடுத்த தலைமுறையில் வீடு நிறையப் பெண் குழந்தைகள் பிறந்தனர். நான் பிறந்த போது “ஹ்ம்ம், பையனா?” என்று சலித்துக் கொண்டு இரண்டு நாள் கழித்துத் தான் அப்பா பார்க்க வந்தார்.

முதலில் பிறக்கும் பெண் குழந்தைக்கு அழகம்மை என்று பெயரிடுவது எழுதப் படாத விதியாயிற்று. என் தங்கை பெயர் அழகம்மை. பெரியப்பா வீட்டில், சித்தப்பா வீட்டில் என்று மொத்தம் நான்கு அழகம்மை. பெண் பிள்ளை இல்லாத சித்தப்பா வீட்டில் அழகப்பன். என் மகள் பெயரும் அழகம்மை. விசேஷ நேரங்களில் அனைவரும் கூடும் போது குட்டி அழகு, பெரிய அழகு, தூத்துக்குடி அழகு என்று அடைமொழிகளால் அழைக்கப் படுவார்கள்.  மொத்தத்தில் அழகு நிறைந்த வீடு.

Wednesday, November 26, 2014

To Alagu, as you enter your teens

1.60 kg. That is what you weighed when you opened your eyes. Born in 32 weeks, you were a wee bit of skin and bones. The obstetrician gave you a 50-50 chance. As soon as you were born, even before your mother came out of sedation, we sprinted you to the neo-natal ICU in another hospital. The pediatrician there was slightly more positive, he gave you a 75% chance. For the next ten days, I was allowed to see you 10 minutes every day as you lay in the incubator. I was the only visitor allowed, as your mother was still recuperating from her C section.

You defied the odds. You grew up as normal as I could have expected. You made us proud. You picked up the public speaking gene from me; the obsession about perfection from your mom. It wasn't easy going all these years. You gave us a couple of health scares. You have a fiery temper; I have had to use harsh words against you. Of late, you have taken to laughing at me. Especially when I say "Don't spend too much time reading, rest your eyes". You look at me mockingly, without asking "Says who?".

You are doing well in school. You are winning prizes in competitions. But what made me most proud was when you finished 'Sivakamiyin Sabatham' novel and said to me "So sad appa. None of them got what they wanted. Narasimha varman and Sivakami couldn't marry, Naganandi didn't get Sivakami, Aayana Sirpi didn't get the secret about the dyes. Though the novel ended with a victory for Pallavas, it really shows that life is absurd". You have got that right, Alagu. Life is absurd. Wishing you a great life as you step into your teenage.

A few years down the line you will read this. And curse me, "Appa, why did you embarrass me with that cloying post?" .

Monday, September 29, 2014

ஒரு இனிய ஞாயிறு மதியம்

"ஏய், என்ன பண்ணிட்டிருக்க."

"ஒண்ணும் இல்ல. ஞாயித்துக்கிழமை மத்தியானம், வெட்டியா தான் இருக்கேன். நீ எங்க இருக்க"

"இங்க விண்ட்ஸர் வரைக்கும் சும்மா வந்தோம். Eton Antique book shop ன்னு ஒரு கடை பாத்தேன். அதான் உனக்கு எதுவும் வாங்கனுமான்னு ஃபோன் பண்ணேன்”

“Antique ன்னா அதிக விலை சொல்வானே.”

“இல்லை 20,30 பவுண்ட்ல எல்லாம் இருக்குது. சார்லஸ் டிக்கன்ஸ் கலெக்‌ஷன், இல்லஸ்ட்ரேட்டட் ஷெர்லக் ஹோல்ம்ஸ். என் colleague கூட Complete works of William Shakespeare 24 பவுண்டுக்கு வாங்கினாரு. 100 வருஷம் முன்னாடி ஸ்கூல்ல பிரைஸ் கொடுத்தது”




“அத எடுத்துக்கோ. 37 டிராமாவும் இருக்கான்னு பாரு. ஜார்ஜ் ஓர்வெல் எழுதின Animal Farm, 1984, ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதின Ulysses, Finnegan's Wake இருந்தா வாங்கு”

சற்று நேரம் கழித்து

“அவன் கிட்டே கேட்டேன். ஓர்வெல் எல்லாம் வந்த அன்னிக்கே வித்துடுமாம்.”

“சரி, ஜேம்ஸ் ஜாய்ஸ்”

“அவன் என்ன கேவலமா பாத்துட்டு அதெல்லாம் படிக்கறது ரொம்ப கஷ்டம், அதுவும் Finnegan's Wake வாய்ப்பே இல்லன்னுட்டான். அவன் கிட்ட காப்பி இல்லையாம். அவனே வேற யார்கிட்டயோ ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கானாம்.”

“நீ அவன் கிட்ட Dubliners படிச்சிருக்கேன் போடான்னு சொல்லியிருக்கனும்.  வேற என்ன இருக்கு அங்க”

“வின்ஸ்டன் சர்ச்சில் எழுதின World War II : Complete set இருக்கு”

“அது ஒரு வால்யூம் படிச்சிருக்கேன், ரொம்ப போர் அடிக்கும். வேற”

“Fall of Roman Empire. அது படிப்பியா?”

“அய்யோ. I have been waiting for it. கிண்டில்ல இலவசமா டவுன்லோட் பண்ணேன். ரெண்டாவது வால்யூம் இல்ல. அதுனால தொடர்ச்சி இல்லாம மூணாவது வால்யூம் பாதிலயே நிப்பாட்டிட்டேன். “

“ஆனா 195 பவுண்ட் போட்டிருக்கான், வாங்கவா?”

“195 ரொம்ப அதிகம். சரி வேணாம் விட்டுடு.”

“இரு, இரு. அதே ரெண்டு வால்யூம்ல 1952ல பப்ளிஷ் பண்ண வேற காப்பி இருக்கு. 38 பவுண்டு தான்”

“உடனே வாங்கிடு.”

Monday, June 16, 2014

கண்ணீர்

”பசங்கள இன்னிக்கு நீ தூங்க வை, எனக்கு ஒரு அரை மணி நேரம் வேலை இருக்கு, நாளைக்கு கிளையண்ட் மீட்டிங்குக்கு” என்ற படி அடுத்த அறைக்குச் சென்றாள் மனைவி.

பையனைத் தூங்க வைக்க கதை சொல்ல வேண்டும். மருது பாண்டியர், அலெக்ஸாண்டர், ஜெஸ்ஸி ஓவன்ஸ், ராஜ ராஜ சோழன், சச்சின் டெண்டுல்கர் என கலந்து கட்டி எனக்குத் தெரிந்த வரலாற்றைச் சொல்வது வழக்கம்.

இன்றைக்கு ஏனோ அவன் கதை கேட்கவில்லை. விளக்கை அணைத்தவுடன் “நாளைக்கு ஏந்தான் மண்டே வருதோ, ஸ்கூலுக்குப் போகவே பிடிக்கல” என்றான்.

”ஏன், உனக்குத் தான் ஸ்கூல் போக பிடிக்குமே, இப்ப மட்டும் என்ன” என்று கேட்டேன்.

“இல்ல, ஸ்கூல் இல்லைன்னா நாளைக்கு ஃபுல்லா உங்களோடயே இருக்கலாமில்ல” என்றான்.

“அது சரி, இப்ப தூங்கு”.

ஐந்து நிமிடங்களில் கேவிக் கேவி அழும் சத்தம். என்னமோ ஏதோ என்று எழுந்து பார்த்தால் அவன் கண்களில் தாரை தாரையாய்க் கண்ணீர்.

“ஏண்டா அழறே. என்ன ஆச்சு, கால் வலிக்குதா”

“இல்ல”

அந்தப்பக்கம் படுத்திருந்த மகள் கேட்டாள், “ தலைய கட்டில்ல இடிச்சுகிட்டியா”

“அதெல்லாம் இல்ல”

”அப்ப என்ன தான் ஆச்சு” என்று அவன் கண்ணைத் துடைத்த படி கேட்டேன்.

“இல்ல, வயசானா எல்லாரும் செத்துடுவாங்கள்ல, நீங்களும் சாகுவீங்கள்ல, அப்புறம் நான் உங்கள எப்படி பாப்பேன்? நீங்க என்ன விட்டுப் போயிடுவீங்கள்ல” என்று கண்ணீருக்கிடையே திக்கித் திக்கிச் சொன்னான்.

ஏழு வயதில் சாவைப் பற்றி யோசித்திருக்கிறான். என்ன சொல்லி சமாதானப் படுத்துவது?

“நீ அதுக்கெல்லாம் கவலைப் படாதடா. இன்னும் நாப்பது அம்பது வருஷம் ஆகும். அது வரைக்கும் அப்பா உன்னோட தான் இருப்பேன். இப்ப அழாத” என்று கட்டியணைத்த படி முதுகைத் தடவிக் கொடுத்தேன். அந்தப் பக்கமிருந்து மகள் மெதுவாக என் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.

Thursday, April 18, 2013

மூங்கில் காடுகள்

எந்த மடையனாவது சித்திரை வெயிலில் பகல் நேரப் பேருந்துப்பயணம், அதுவும் பத்து மணி நேரம், திட்டமிடுவானா? என் திட்டத்தை எண்ணி என்னை நானே வைது கொண்டேன். வேலூரில் ஒரு வேலை, உடுமலையில் ஒன்று. இரண்டையும் ஒன்றாக இணைத்த போது இந்த வெயிலைப் பற்றி நினைக்கவில்லை.

மதியம் பன்னிரண்டு மணிக்கு வேலூரில் இருந்து சேலம் செல்லும் பேருந்தில் ஏறினேன். பேருந்து ஓடினால் முகத்தின் எதிரே தீச் சுவாலையை பிடித்தாற் போன்ற அனல் காற்று. நின்றாலோ ஊற்றெடுக்கும் வியர்வை. தாகத்தைத் தணிக்க அருந்திய குளிர்பானங்கள் எல்லாம் அருந்திய கணம் ஆவியாய் மாற, அவற்றின் திகட்டும் இனிப்பு மட்டும் வேண்டா விருந்தாளியாய் நாக்கில் படர்ந்து மேலும் எரிச்சலூட்டியது.

அகன்ற சுவரொட்டிகளில் கோடி வன்னியர்களை பெரிய அய்யாவும் சின்ன அய்யாவும் சித்திரை நிலவு அன்று மகாபலிபுரத்திற்கு அழைத்துக் கொண்டிருந்தார்கள். பல்லவர்கள் எப்போது வன்னியர்கள் ஆனார்கள் அல்லது வன்னியர்கள் எப்போது பல்லவர்கள் ஆனார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும். சேலம் நெருங்க நெருங்க தனியரசு அவர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்த வயதில்லாமல் வணங்கிக் கொண்டிருந்தார்கள். இடை இடையே எழுச்சி நாயகன் ஈஸ்வரனும் சுவர்களில் தென்பட்டார். “நீ உட்கார்ந்தால் எழுந்திருக்கும் எழுச்சி நாயகன்” பாடல் வரி மனதில் ஓடியது.

வழி நெடுகக் குப்பைகள். தமிழகமே ஒரு மாபெரும் குப்பை மேடாகத் தெரிந்தது. இதைப் பற்றி ஒரு பதிவு மனதிலேயே எழுதிமுடித்தேன். வெக்கையும் வியர்வையும் சேர்ந்து வார்த்தைகளை மேலும் காரசாரமாக்கின.

திருப்பத்தூர் தாண்டியாயிற்று. இன்னும் இரண்டு மணி நேரம் தள்ள வேண்டும். கிண்டிலில் கொண்டு வந்த ரஷ்டியும் கை விட்டு விட்டார். என்ன செய்ய, எரிச்சல் மண்டியது.

அரூர் தாண்டியவுடன் சட்டென சூழ்நிலை மாறியது. அப்பொழுது தான் பெய்திருந்த சிறு மழை. மண்வாசனை. வளைந்து வளைந்து போகும் மலைஅடிவாரப் பாதை.  இந்தக் கோடைக்கு சம்பந்தமே இல்லாத மழை மேகங்கள். அதற்குப் பின்னே இருந்து எட்டிப் பார்க்கிற சூரியன். அதைப் பிடிக்க ஓங்கி நிற்கும் மூங்கில் காடுகள். ”மூங்கில் காற்றில் தீ விழும் பொழுது மூங்கில் காடென ஆயினள் மாது” பாடல். வெள்ளை உடையில் நாணத்தோடு கீழ் நோக்கி அபிநயம் பிடிக்கும் மனிஷா கொய்ராலா.

சட்டென எரிச்சலும் கோபமும் விலகின. மழைக்காற்றால் குளிர்ச்சி பரவியது. எதிர்பாராத சந்தோஷம். இந்த மாதிரி சின்னச் சின்ன சந்தோஷங்களால் ஆனது தானே வாழ்க்கை?

Sunday, March 24, 2013

Karenina in Kindle

For a long time I resisted the temptation to buy a Kindle. I called myself a luddite, and that I loved the paper books too much to settle for electronic ones. But the new Kindle Paperwhite made me a convert. One look at the picture and I decided I had to buy it. However it wasn't available for sale in India. So I turned to Lazygeek, who inspired me to start blogging. He is in Seattle now. I asked him to buy one for me and send it across. He bought it in December, but I had to wait till March for some one to bring it to India. I am floored is to say the least about it. No other gadget I bought has made me so giddy with pleasure.

I am yet to load up new books from the Amazon store. I am loading it with the classics that I have always wanted to read but never did. First up is Tolstoy's Anna Karenina (Constance Garnett's translation). The prblem with the paper version of the classics is their sheer size puts you off. But an ebook reader removes the fear of the size. (Oh, does that sentence read awkward or what?). I have completed part one of the eight part novel and it is easy going so far. I really love his prose. Only now did I learn that this novel was serialized in a magazine, which explains the interesting hooks at the end of each chapter.

For some one who started reading English literature pretty late, my initial introductions came from Tamil novels. The first time I read about Jonathan Livingston Seagull was in one of Sujatha's serialized stories where the heroine rides a bike jumping red light at all the signals in Mount Road wanting to "soar away like Jonathan Livingston Seagull, up up and above". That description stuck with me and I searched and found the book when I could. Similarly the first time I read about Anna Karennina was in Balakumaran's Karaiyora Mudhalaigal where Swapna says that her husband asked what she wanted for her anniversary / birthday  she said Anna Karenina and her husband searched all the saree shops in Chennai for that saree. It made an impression and I always wanted to read Anna Karenina. Now finally, thank to Kindle I am reading it. Next up is another monster - James Joyce's Ulysses.

Monday, September 03, 2012

College Reunion

We had our Engineering college reunion last week. It has been 20 years since we stepped into college. The norm is to celebrate the 20th year of completion of course, but we just needed a reason to get together. We were a batch of 180 students spread across Mechanical, Civil and ECE departments. 52 people attended the meet, which is a decent turn out considering half the class is in US or Gulf.

At the end of the meet a friend said "Almost all of them are earning well, but everybody looks careworn". The exact words he used were "எவன் முகத்துலயும் அருளே இல்ல”. I guess it is due to our age. Once you cross 35, the commitments start to weigh on your mind. More than that, you realize that almost half your life is over and all your dreams of achieving something are just that, dreams. So you desperately seek out your college day memories to assure yourself that you too enjoyed life once, carefree.

Wednesday, July 25, 2012

My city

I don't have any particular city / town that I call my own. 37 years of my life have been spent at 1 city, 1 township and 3 towns.

7 years in SPIC Nagar, 5 years in Pudukkottai, 1 year in Kumbakonam, 4 yrs in Chennai, 4 yrs in Kilakarai (College), 5 years in SPIC Nagar again, 7 years in Chennai and last 4 years shuttling between Chennai and Tuticorin. In none of these towns and cities have I felt as a part of that place. I am a perennial outsider, wherever I am.

Some people love the city they grow up in. Take Chandrachoodan for example. He might be city hopping every other year, but still his love for Madras/Chennai grows stronger. Or Bishwanath Ghosh - he loves Chennai so much that he wrote a wonderful book about it. I envy them. I love history, I dig up facts about hoary Madras, but if you ask me whether I love this city or am proud to be a Chennaivasi, I can't give you a straight answer.

Tuticorin is another thing altogether. I have spent close to 16 years in and around Tuticorin, but can never be part of this town. I earn my bread here, did part of my schooling here, but still feel a rank outsider.

Pudukkottai and Kumbakonam are only hazy memories. I hardly remember anything about those towns. When we planned an alumni meet and the idea of meeting at Kilakarai was mooted, every one rejected it. That should say a lot about how we felt about Kilakarai.

Partly due to the regular visits to the ancestral house and partly due to the strong bond with the extended family, the only place where I feel at home is my village, where I have hardly stayed for more than 10 days  at a stretch. Ofcourse, the villagers look at me as an outsider there too.

Monday, July 09, 2012

When I lied to novelist P.A. Krishnan

The last 10 years of my career has been spent in selling services. I was trained as an Engineer and worked as one for 5 years before stumbling into sales. With my inherent shyness and inability to make a lasting impression, I struggled in the initial years. I could sell to them over phone, I was pretty confident with words, but meeting one to one was a torture.

During my initial ship chandling years, I visited Dubai to sell our services to ship owners and ship management companies there. I was tagged along with a sales person from our company's associate concern in Dubai. This person was an Anglo Indian from Mumbai, and a born sales person. I went along with him for a week in client visits. He was able to connect instantaneously with any client. He could talk passionately about EPL footbal with an Arab Sheikh for an hour, and in the next floor extol the miracles of Mahim Church with a Mumbai Christian.

Those were my initial days, so I looked up to him with awe. During the breaks he used to explain to me - "Always look for a connect with a client. It might be anything - football, movies, religion - but find something common that binds you both.". It was easy for him - but I never could do that. In Glasgow, a shipping company executive asked me "Is Nathan your Christian name?". I blurted out, "No it is my Hindu name". I was that inept.

I do try to follow his advice and it has helped me in my decade of selling services. Couple of years ago I was with a purchase manager from one of the mills that I serve. He had been using our services for a couple of months then, but we still hadn't cemented our place. So I was talking to him, exploring for some connect.

He asked me "Where are you from ?"

I replied "I am from Karaikudi area, but am living in Tuticorin and Chennai"

"I have come to Karaikudi a couple of times. My father was an active participant in Kamban Kazhagam" he said.

Bingo. I had participated in a Kamban Kazhagam (a society that actively promotes Kamba Ramayanam) during my schook days and had even won prizes for recital. I had my connect. As I told him about it, he asked "Oh, so you are interested in Tamil Literature? What magazines you read?"

In order to look sophisiticated I lied "I read Kalachuvadu and Uyirmmai". These are the powerful literary magazines in Tamilnadu. I don't subscribe to them, but read them whenever they are available free online.

He was impressed. "My brother writes in Kalachuvadu regularly. You might know him. He is P.A. Krishnan"

I bluffed once again "He is a favourite writer of mine. I have read his novel புலி நகக் கொன்றை. It was awesome".

I knew about P.A. Krishnan, I knew about the novel, I had read about the novel, but I had NOT read the novel. No harm in lying for a sales contract, I told myself.

"Oh you are such a fan of his? Ok, let me call him and you can talk to him".

Now I was caught. I had to go through the lie. I talked to P.A. Krishnan, told him that I am his fan and safely steered the conversation away from the novel to his essays a few of which I had read. He asked me about his latest article in Kalachuvadu about Egypt, I hemmed and hawed and managed to end the conversation.

Whether this bluff helped me or not, I am not sure but I did serve his brother's mill for quite some time. His brother has since then left the mill. I too don't serve them anymore, so I can put this in public domain.

I did buy புலி நகக் கொன்றை in the next Chennai Book Fair and read it. It is one of the better Tamil novels I have read, centered around 4 generations of a Thenkalai Iyengar family near Nanguneri. It is on par with "The shadow lines" by Amitav Ghosh.

Tuesday, April 05, 2011

For memories yet to be - நினைவுகளுக்காக

For memories yet to be
Sun's golden orb has slid down
In the crackling bonfire's light
hazy becomes the view.

What musk of impatient desire
will scent these memories?

Pearl sheened moonlight night's
orchestral music for us.
What trance like satiety
will fill your eyes?

How many more jasmine scented dreams
for us - playing our heart's tune?
How many more jasmine scented dreams
for us - of desire filling our cravings?

நினைவுகளுக்காக
சூரியனின் தகதகப்பு அமிழ்ந்த பின்
எரியும் நெருப்பின் வெளிச்சத்தில்
என் பார்வையில் மேக மூட்டம்.

மட்டுப்படா மோகத்தின் வாசம்
இந்த நினைவுகளில் வீசுமா?

முத்துப் போன்ற நிலவொளி
இந்த இரவு நமக்காக மீட்டும் கானம்.
மோட்சத்தை அடைந்த நிம்மதி
உன் கண்களில் பரவுமா?

இன்னும் எத்தனை எத்தனை மல்லிகை மணக்கும்
கனவுகள் நமக்கு - இதய ராகத்தை மீட்டிய படி?
இன்னும் எத்தனை எத்தனை மல்லிகை மணக்கும்
கனவுகள் நமக்கு - பொங்கும் ஆசையை அள்ளியபடி?



Lalita sent me a Telugu poem of hers, months before she passed away saying it was one of her favorites. Since I couldn't get the meaning using any translation tools, she translated it into English for me. Finally after almost three years I got around to translating it into Tamil.

Sunday, October 03, 2010

Vehicle Nos. 7 & 8

Blogging has taken a back seat in the last few months. So much so that putting up a post here almost feels like intruding into some one else's blog. Have added two more vehicles to my fleet. The count now stands at 8.



Wednesday, July 22, 2009

Books

Warning: A long self indulgent narcissistic post

The firs time I remember asking for a book was when I was 5 years old and waiting in Tuticorin Bus Stand along with my father. It was some comics that I wanted, he refused to buy it for me. For some reason that is one of the earliest memories I have.

Till my 2nd Standard I was content reading the school text books of higher class kids. My real exposure to books came during that summer holiday. My father had gone to Libya and we moved to Pudukkottai. My mother's village was near by and I spend that summer vacation there with no other kid in sight. To while away my time I went to the Library in the next street. The entire summer was spent devouring fairy tales and Ambuli Mama kind of books in Tamil. By now I was hooked and used to read any printed matter I could lay my hand upon. I started reading the serialised stories in Ananda Vikatan and Kumudam and the novels (?) published in Malaimathi. Once when my third standard class teacher missed the last part of Manian's serialised story, I told her the ending. She was shocked, the story was about extra marital affairs :-).

The next phase was the pocket crime novels which hit the Tamil publishing scene in mid 80s. Rajeshkumar, Pattukkottai Prabhakar and Suba were the trinities and I still remember their characters. After a year or so I felt bored and could predict the story line after the first few pages. There were a few novels that I read during this period that stood out from the crowd - Balakumaran's Karaiyora Mudhalaigal & Thayumanavan, Sivasankari's Tharaiyil Irangum Vimanangal, Sujatha's stories.

We moved to Madras when I was 13 years old. It was here that I read my first English fiction. It wasn't any classic novel but Sydney Sheldon's Windmills of Gods. I borrowed it from a neighbour who thought long about whether it was appropriate for me. Before I was 15 I had read almost all of Harold Robbins and Sydney Sheldon that were available in my Bengali Neighbour's book case. But the two books I remember vividly are the Victorian Erotica - Charles Deveraux's Venus in India (There is something about this book and Bongs. The only reference I have found so far in blogs about this book is in Sadoldbongand The Pearl(I found the entire collection online couple of years back, oh the joys of internet). I used to slip these away between two other innocuous books.

Four years of Engineering college in Kilakarai was dry and arid in terms of books. The entire hostel had some 10 guys who read English Fiction and a total of 20 paper backs. It was in college that I read my first war novel, War Cry by Leon Uris and thought of him as a great war novelist. The Architecture branch was opened in our college when I was in my second year of Engineering. The lecturer for Architecture told the class on the first day to read Ayn Rand's Fountainhead if they really wanted to become Architects. When I heard about this I was intrigued and borrowed the book from him, who belonged to the first batch of Architecture students in our college.

It was during a night shift in my first job that I got introduced to contemporary Tamil Literature by a senior engineer. Till then my Tamil Literature limit was Sujatha and Balakumaran. He introduced me to Thi Janakiaraman, Asokamithran, La Sa Ramamrutham and Sundara Ramasamy. To say it was a shock to me is an understatement. After years of reading mediocre stuff in Tamil, this was like a fresh breath to me. Next few years were spent in reading all the works of these authors.

By this time I had moved back to Chennai and started blogging in 2002. Blogging expanded my reading horizon. It was through blogs I learnt about and started reading authors like Borges, Marquez, Amitav Gosh, Vikram Seth and so on. At the same time Tamil blogs led me to Jeyamohan, Imayam, S Ramakrishnan, Adhavan, Pa Singaram, Nakulan and many others.

The above recollection was triggered after reading Umberto Eco's Mysterious Flame of Queen Loanna, where an art dealer loses his memory but remembers all the books he has read and tries to recollect his life by re reading the books from his child hood. It is a self indulgent, meandering story, but you will enjoy it if you love books. One of the books he recollects is a comic set in India with a villainous king named Tremal Naik :-)

Tuesday, March 03, 2009

திருவிளையாடல்

”அப்பா, நேத்து ஐயா எனக்கு திருவிளையாடல் கதை எல்லாம் சொன்னாங்க”

“ம். நல்லா பொழுது போயிருக்குமே, ஏதாவது ஒரு கதை சொல்லு பாப்போம்”

“பிட்டுக்கு மண் சுமந்த கதை சொன்னாங்க. அதுல எனக்கு ஒரு டவுட்டுப்பா. ராஜா பிரம்பால சிவன் முதுகுல அடிச்சவுடனே உலகத்துல எல்லார் முதுகிலயும் அடி விழுந்ததுல்ல?”

“ஆமாம். அதுல என்ன சந்தேகம்?”

“எல்லார் முதுகிலயும்னா ஆஃப்ரிக்கா, சைனாவுல இருக்கிறவங்க முதுகிலயுமா இல்ல இந்தியாவில மட்டும் தானா?”

“அப்பா கார் ஓட்டுறப்போ பேசாத, அப்புறமா சொல்றேன்”

Monday, December 29, 2008

Year end List

Best

book I read : Tamil - Puyalile Oru Thoni by Pa. Singaram
English - Sea of Poppies by Amitav Gosh

movie I saw : Subramaniapuram - Tamil

blog I found : can't think of any

trip I went on : Manjolai and Upper Kothaiar

That is my year end list. This year was important to me in many ways - first full year as an entreprenuer, the incident in May that shook me to the core, final meeting with Lalita Mukherjea and her passing away. It was a roller coaster ride, hope the next year is a little more sedate.

Tuesday, September 16, 2008

50,000 km in a year

For the last one year I have been travelling between Chennai and Tuticorin by train almost every weekend. That is 1300 km per week, more than 50,000 km in a year. Nothing unique about this statistic, just felt like putting this up.

Wednesday, August 27, 2008

Lalita - a retrospective

The bloggers who knew Lalita were smitten by her. It was her easy erudition, delightful prose, quirky sense of humour, grit in the face of adversity, non judgemental attitude and an undefinable charm factor that made most of us idolize her. Those who heard about her only after her death might wonder what all the fuss is about.

On hearing about her death, I was stumped. Instinctively I went to her blog and started reading her archives. Somehow reading the archives gave a sense of false relief, as if she is still alive through her words.

I link here a sample of her posts.

The perfect omelette - this was the first post I read. Frankly, the omelette can't be as delicious as her prose. Anagram, crossword, cooking, etymology - a classic Lalita post.

Having negotiated these turbulent rapids of passionate romances, infatuations and crushes a few decades ago and now floating serenely in the placid pools of affection and fondness, - That sentence alone makes this post worthy of reading.

This is the post where she talks about translating Rabindra Sangeet.

Her visit to Madras, her hometown

The first words she spoke to her husband

Her take on Ahalya, the impossible virgin

Spices are flavouring. They add additional notes to the song of a dish. What spice are you?

Not ginger or garlic, though you do bring pungency of desire. Not cardamom or cloves, though you add fragrance and fire. Not cinnamon though there is fragrance fire and pungency all there. Not cumin and coriander either, flavourful but too common.

Then I thought that all these spices are seeds, pods, fruit, bark or resins, they grow out of earth. They enhance, yes, but they are not necessary, or vital. There is something else that is absolutely vital- of the earth, no the earth itself- salt.
- Dilbar dil se pyaare

Happiness is hindsight, really

Her Poem - Love in a rocking chair

Her Poem - Let's spend the night together

The post where she informed us about her cancer, written is such a sun-is-shining-brightly attitude that most of us didn't understand the enormity of it.

A poem of mine that she translated

My favorite poem of hers

Her last post, a dark tale.

As I said earlier, thanks for everything Lalita.

Tuesday, August 26, 2008

Thanks for everything, Lalita

Lalita is no more. She loved words. She would have liked a pithy obituary, preferably with an anagram or two thrown in. I can't write anything for her now. I am glad that I could meet her a couple of times and discuss poetry and translation with her. This was the last translation she wrote for me.

ஒரு வண்ணத்துப் பூச்சி எந்தன் வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இங்கு விரலோடு உள்ளது

A butterfly once happened upon my path
My fingers still sport tints of aftermath.

What more to say. Thanks for everything Lalita.

Sunday, June 15, 2008

Meeting Lalita

The shock in my face must have been apparent. She smiled wistfully and welcomed me, while I struggled for proper words. She had informed me that she had lost weight rapidly, still I wasn't prepared for this. The only time I had met her earlier was when she came down to Chennai a year and a half back. The change in her appearance was drastic, to say the least.

She put me at ease with her charming smile and took me in.

"I hope you don't mind if I park myself in the bedroom, since it is difficult for me to move about now a days" she said.
"How is the pain?", I asked stupidly.
"Oh it is always there, only the intensity varies from day to day. On days it is bad, it is really bad. Today seems to be better" she answered nonchalantly, almost as if we were discussing the weather.

Then the conversation steered to blogging and we were on safer ground. Her husband joined us and she proudly informed me that he is now a contributor to a music blog on classical Hindustani music. I nodded my head wisely and kept discussing about poetry and blogging and general stuff. She left us alone for a moment, and I turned to him and said, "Sorry Mr. K, hope we aren't boring you with our discussion. I know zilch of any music, leave alone Hindustani music". He smiled gently and said "That's ok. We don't discuss music all the time between us".

The conversation steered off to Madras, and both of them were shocked to know that Woodlands Drive Inn was closed down. "This is unfair, they are closing down all the places that were on our dating list. First Buharis, now Woodlands" she said sadly. K was hearing us out patiently interfering only to correct us now and then. "I think you meant superficial when you said superfluous, Lali" or "I think it was PL 480, not PL 64" when I was talking about wheat imports from US in the 1960s.

She had earlier mentioned that she was on liquid diet since the cancer made it impossible for her to swallow. So, true to form I had taken her half a bottle of Cognac ("Only you can think and do such things" chided my wife). As the evening grew older, Whiskey and Cognac added to the pleasant feeling of a great conversation. She has strong opinions about the quality of writing in blogs, but keeps them to herself. If only she wrote those opinions, we would have blog fights all over the place.

The next day, the maid and the watchman smiled at the familiar face and let me in without questions. We discussed about the progress of her disease, the various treatments she is taking (Along with allopathic medicines , she tried tibetan medicine and couldn't stand the vile black globules, she is now on homeopathy, which seems to be working in alleviating the pain). She was as sharp as ever, playing word games. "My oncologist was referred by my surgeon. The surgeon told me that he had sent many of his patients to this oncologist and they were happy with him. Were is the key word here, Chenthil".

Then we discussed about poetry, classification of poetry in telugu literature (grapes, banana and coconut, in the order of complexity), which modern Indian English poet she thinks is the best (Vikram Seth's Golden Gate), her distaste of cadence less non metered poetry, her appreciation of Ulysses and Finnegan's Wake. Her cheeriness almost made me forget that she might be dying till my eyes wandered down to the stump where her toe was.

In one of our email conversations she had praised a young painter friend of hers and went on and on about his painting. She showed me his painting that was displayed prominently in her drawing room. I looked at it, and looked at it. And after a minute said in a small voice, "Honestly Lalita, I can't make out what it means. All I see are bold color strokes in random". Her house made me feel like a philistine - huge library, one book shelf full of mathematics and topology (his), one rack of Cricket books (again his), two shelves of telugu literature (hers), Will Durant and Bertrand Russel (his), all of Shakespeare (theirs).

I sort of gained K's appreciation when I could answer his favorite cricket quiz question - Persons of how many religions have captained Indian cricket team so far. He was pleased when I knew Vijay Hazare was a christian and knew his middle name too - Vijay Samuel Hazare. "You are a real student of cricketing history" he murmured and for some reason I was pleased a lot at this faint praise. We both agreed that though Nirad Chaudhuri's ideas were crazy he was a great writer.

By now it was time for me to leave. I bid good bye to him and she came to see me off. At the doorstep, my composure cracked. I held her hands and said, "I hope that this is not the final farewell, Missus Em. Hope to see you again". She noticed my misty eyes, and hugged me. "Come on, once they fix a stent in my throat and I can take solid food, I will come down to Chennai. We shall have a Masala Dosa in Saravana Bhavan, now that Woodlands Drive In is closed".

Do try to keep your word Missus Em. Don't leave us yet.