Showing posts with label Kambaramayanam. Show all posts
Showing posts with label Kambaramayanam. Show all posts

Saturday, May 11, 2019

நறவு உண்டு நிறைகின்றேன்


தெளிந்து தீவினையைச் செற்றார்
      பிறவியின் தீர்வர்'' என்னா,
விளிந்திலா உணர்வினோரும்,
      வேதமும், விளம்பவேயும்,
நெளிந்து உறை புழுவை நீக்கி,
      நறவு உண்டு நிறைகின்றேனால் -
அளிந்து அகத்து எரியும்
      தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.

என்னமா எழுதியிருக்கான். கிட்கிந்தா காண்டத்துல வாலி செத்ததுக்கப்பறம் ராஜாவான சுக்ரீவன் சீதையைத் தேடித் தரேன்னு ராமனுக்குக் கொடுத்த வாக்கை மறந்து மப்புல கிடக்கான். ராமன் கோபமா லட்சுமணனை அனுப்பறான். இவனால எந்திரிக்கவே முடியலை. அனுமான் டெக்னிக்கா தாரை தலைமைல மகளிர் அணிய அனுப்பி லட்சுமணன் கிட்ட பேசி சமாதானப் படுத்தறான்.

அங்கதன் வந்து திரும்பவும் சுக்ரீவன எழுப்ப, ஏன் என் கிட்ட முன்னாடியே சொல்லலைன்றான். அங்கதன் “உன்ன எழுப்ப முடியல, கட்டிங் போட்டுட்டு குப்புற அடிச்சுக் கிடந்த”ங்கறான். அப்ப சுக்ரீவன் கழிவிரக்கத்துல சொல்ற பாட்டு இது.

    
அளிந்து அகத்து எரியும்
      தீயை நெய்யினால் அவிக்கின்றாரின்.
நறவு உண்டு நிறைகின்றேன்

வீட்ல கொழுந்து விட்டு எரியற தீயை நெய் ஊத்தி அணைக்க முயற்சி பண்றது மாதிரி, கட்டிங்க போட்டு நிம்மதியா இருக்க நினைக்கிறேன். அது இன்னும் பத்திட்டு எரியுது.

எத்தனை வருஷம் வேணுமோ இதுல மூழ்கி முத்தெடுக்க.