திருத்தம்:
1. இந்தப் பதிவு முதலில் சங்கச் சொற்கள் என்று தவறாகத் தலைப்பிடப் பட்டிருந்தது. ஏலாதி நூல் பதிணென்கீழ்க் கணக்குத் தொகையில் வருவது. சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம். அதனால் சங்கம் என்பதைப் பழந்தமிழ் என்று மாற்றி விட்டேன்.
2. அசனம் என்பது வடமொழிச் சொல் என்று பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.
அசனம் என்ற சொல்லை நான் முதலில் கேட்டது நான்கு வருடங்களுக்கு முன்பு தான். என் கூட வேலை பார்த்த அந்தோணிசாமி அண்ணன் தான் கூறினார் “அண்ணே, இந்த வருஷம் புளியம்பட்டி அந்தோணியார் கோயில் திருவிழால அசனம் வச்சிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும்”
புளியம்பட்டி அந்தோணியார் கோயில் தூத்துக்குடி - திருநெல்வேலி கிறித்தவர்கள் மத்தியில் புகழ்பெற்றது. ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் கூட வரும். ஆனால் அசனம் என்ற சொல் புதிதாக இருந்தது. இந்தப் பக்கங்களில் போர்த்துகீசியர் தாக்கத்தில் பல சொற்கள் இருக்கும். அது போல ஒரு புதிய சொல் என்று நினைத்தேன்.
“சரிண்ணே. வந்துடறேன். அசனம்ன்னா என்னண்ணே”
“உங்க கோயில்ல எல்லாம் அங்க வச்சு சமைச்சு சாப்பாடு போடறீங்கள்லண்ணே ,அது மாதிரி ஊர்லருந்து வண்டி கட்டிட்டுப் போய் அங்க கோயில் பக்கத்தில வச்சு சமைச்சு எல்லாருக்கும் சாப்பாடு போடறது. அன்ன தானம்னு வச்சுக்கங்களேன்”
எங்களூர் மலையக்கோயிலில் ’வடிச்சுப் போடுவது’ போல என்று நினைத்துக் கொண்டேன். திருவிழாவும் மலையக்கோயில் தைப்பூசம் போல் தான் இருந்தது. பாகு ஊறிய கருப்பட்டி மிட்டாயும், அசனம் என்ற சொல்லும் நினைவில் நின்றன.
சில மாதங்களுக்கு முன்பு tamilvu.org தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது பதிணென் கீழ்க் கணக்கில் ’ஏலாதி’ தென்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவே தெரியும். அதிலும் இதைப் படித்ததே இல்லை. சரி படித்துப் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன். அறிவுரை நூல் தான். அதில் மீண்டும் தென்பட்டது ‘அசனம்’
உரை : எள்ளே - எள்ளும், பருத்தியே - பஞ்சினாலாகிய அரை ஞாணும், எண்ணெய் - எண்ணெயும், உடுத்து ஆடை - உடுத்தும் ஆடையும், வள்ளே - பணமும், துணியே - போர்வையும், இவற்றோடு - ஆகிய இவற்றுடன், அசனம் - உணவும், கொள் என்ன - ஏற்றுக்கொள்வீர்களாக வென்று சொல்லி, அன்புற்று கொடுத்தான் - அன்புகூர்ந்து கொடுத்தவன், துணையினோடு இயைந்து - தன் மனைவி முதலிய சுற்றத்தாரோடு கலந்து, இன்புற்று வாழ்வான் - இன்பம் பொருந்தி வாழ்வான்.
எனக்குப் புதிதாகத் தெரிந்த சொல், இரண்டாயிரம் ஆண்டுகளாக அதே அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாஞ்சில் நாடன் சொல்வது போல வட்டார வழக்கு என்று சற்று இளக்காரமாக அழைக்கப்படும் வழக்குகள் தான் தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வருகின்றன.
tamilnation வலைத்தளத்தில் படித்த மேற்கோள் நினைவுக்கு வருகிறது “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் உள்ளது”.
1. இந்தப் பதிவு முதலில் சங்கச் சொற்கள் என்று தவறாகத் தலைப்பிடப் பட்டிருந்தது. ஏலாதி நூல் பதிணென்கீழ்க் கணக்குத் தொகையில் வருவது. சங்க காலத்துக்குப் பிற்பட்ட காலம். அதனால் சங்கம் என்பதைப் பழந்தமிழ் என்று மாற்றி விட்டேன்.
2. அசனம் என்பது வடமொழிச் சொல் என்று பின்னர் தான் தெரிந்து கொண்டேன்.
அசனம் என்ற சொல்லை நான் முதலில் கேட்டது நான்கு வருடங்களுக்கு முன்பு தான். என் கூட வேலை பார்த்த அந்தோணிசாமி அண்ணன் தான் கூறினார் “அண்ணே, இந்த வருஷம் புளியம்பட்டி அந்தோணியார் கோயில் திருவிழால அசனம் வச்சிருக்கோம். நீங்க கண்டிப்பா வரணும்”
புளியம்பட்டி அந்தோணியார் கோயில் தூத்துக்குடி - திருநெல்வேலி கிறித்தவர்கள் மத்தியில் புகழ்பெற்றது. ஏற்கனவே கேள்விப் பட்டிருக்கிறேன். ஜோ டி குரூஸ் எழுதிய ‘ஆழி சூழ் உலகு’ நாவலில் கூட வரும். ஆனால் அசனம் என்ற சொல் புதிதாக இருந்தது. இந்தப் பக்கங்களில் போர்த்துகீசியர் தாக்கத்தில் பல சொற்கள் இருக்கும். அது போல ஒரு புதிய சொல் என்று நினைத்தேன்.
“சரிண்ணே. வந்துடறேன். அசனம்ன்னா என்னண்ணே”
“உங்க கோயில்ல எல்லாம் அங்க வச்சு சமைச்சு சாப்பாடு போடறீங்கள்லண்ணே ,அது மாதிரி ஊர்லருந்து வண்டி கட்டிட்டுப் போய் அங்க கோயில் பக்கத்தில வச்சு சமைச்சு எல்லாருக்கும் சாப்பாடு போடறது. அன்ன தானம்னு வச்சுக்கங்களேன்”
எங்களூர் மலையக்கோயிலில் ’வடிச்சுப் போடுவது’ போல என்று நினைத்துக் கொண்டேன். திருவிழாவும் மலையக்கோயில் தைப்பூசம் போல் தான் இருந்தது. பாகு ஊறிய கருப்பட்டி மிட்டாயும், அசனம் என்ற சொல்லும் நினைவில் நின்றன.
சில மாதங்களுக்கு முன்பு tamilvu.org தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது பதிணென் கீழ்க் கணக்கில் ’ஏலாதி’ தென்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் மிகக் குறைவே தெரியும். அதிலும் இதைப் படித்ததே இல்லை. சரி படித்துப் பார்ப்போமே என்று ஆரம்பித்தேன். அறிவுரை நூல் தான். அதில் மீண்டும் தென்பட்டது ‘அசனம்’
எள்ளே, பருத்தியே, எண்ணெய், உடுத்தாடை,
வள்ளே, துணியே, இவற்றொடு, கொள் என,
அன்புற்று, அசனம் கொடுத்தான்-துணையினோடு
இன்புற்று வாழ்வான், இயைந்து.
உரை : எள்ளே - எள்ளும், பருத்தியே - பஞ்சினாலாகிய அரை ஞாணும், எண்ணெய் - எண்ணெயும், உடுத்து ஆடை - உடுத்தும் ஆடையும், வள்ளே - பணமும், துணியே - போர்வையும், இவற்றோடு - ஆகிய இவற்றுடன், அசனம் - உணவும், கொள் என்ன - ஏற்றுக்கொள்வீர்களாக வென்று சொல்லி, அன்புற்று கொடுத்தான் - அன்புகூர்ந்து கொடுத்தவன், துணையினோடு இயைந்து - தன் மனைவி முதலிய சுற்றத்தாரோடு கலந்து, இன்புற்று வாழ்வான் - இன்பம் பொருந்தி வாழ்வான்.
எனக்குப் புதிதாகத் தெரிந்த சொல், இரண்டாயிரம் ஆண்டுகளாக அதே அர்த்தத்தில் தமிழில் பயன்படுத்தப் பட்டு வருகிறது. நாஞ்சில் நாடன் சொல்வது போல வட்டார வழக்கு என்று சற்று இளக்காரமாக அழைக்கப்படும் வழக்குகள் தான் தமிழ்ச் சொற்களைப் பாதுகாத்து வருகின்றன.
tamilnation வலைத்தளத்தில் படித்த மேற்கோள் நினைவுக்கு வருகிறது “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் உள்ளது”.
சிறப்பான பதிவு. நன்றி.
ReplyDeleteThis is very interesting. The Sanskrit word अशनम् for eating/food is very common. So this is an indication of the strong ties from ancient times.
ReplyDeleteவட இந்தியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தை பிட் நோட்டீசில் 'அன்ஷன்' (அதாவது 'அனசனம்') என்று எழுதுவார்கள். இன்றும் தமிழகத்தில் சமணர் வட்டாரங்களில் வழக்கிலுள்ள சொல் என்று எனது கருத்து.
ReplyDelete